வலங்கைமான், நவ. 21: வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சியில் மின்விநியோகம் சீரடையாத காரணத்தால் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் கஜாபயுல் தாக்கத்தால்முன்னனூறுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தது. இதன் காரணமாக வலங்கைமான் தாலுகாவில் அனைத்து பகுதிகளும் இருளில் முழ்கியது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிகளிலும் மின்தடை ஏற்பட்டதால் இணையசேவை மற்றும் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக மின்விநியோகம் சீர்செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலவிடையல் ஊராட்சி பெரியார் காலனியில் இருநூறுக்கும் மேற்பட்ட குடுபங்கள் உள்ளன.