கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் இரண்டு பெண்கள் பலி

கோவை, நவ.21: கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பின் கராணமாக மேலும் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். திருப்பூரை சேர்ந்தவர் பேபி(22). இவர் கடந்த 17ம் தேதி பன்றிக்காய்ச்சலுக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதே போல், பொள்ளாச்சி பழனிகவுண்டனூரை சேர்ந்த வீரம்மாள்(50).

இவர் பன்றி காய்ச்சலுக்காக கடந்த 18ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால், கோவையில் காய்ச்சல் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு 44 பேர், டெங்குவிற்கு 2 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 54 பேர் என மொத்தம் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: