நாமக்கல், நவ.21: நாமக்கல் மாவட்டம் முழுவதும், இன்று (21ம் தேதி) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவமனை வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு திசையில் கடலூருக்கும் சென்னைக்கும் இடையில் தோன்றி வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று(21ம் தேதி) மாலைக்குள் கடலை கடக்க உள்ளதாலும், அதன் திசையில் நாமக்கல் உள்ளதால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படும். கோழிப்பண்ணையாளர்கள் காற்றின் வேகம் கூடுதலாக காணப்படும் என்பதால். தகுந்த முன்னெச்சரிக்கை நடவழக்கை எடுக்கவேண்டும்.