நிலையூர் விரிவாக்க கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்

மதுரை, நவ. 20: நிலையூர் விரிவாக்க கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மதுரை மாவட்டம் கூடக்கோயில், கப்பலூர், சொக்கநாதன்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘வைகை அணையில் தண்ணீர் தேவையான அளவு இருப்பு உள்ளது. தற்போது, நிலையூர் கால்வாய் மூலம் நிலையூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்து தேக்கப்படுகிறது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால், ஆற்றில் வீணாக திறந்து விடப்படுகிறது. தண்ணீரை நிலையூர் கால்வாய் மூலம், நிலையூர் கண்மாக்கு திருப்பி, நிலையூர், கம்பிக்குடி வரையிலான விரிவாக்க கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதன்மூலம் கப்பலூர், சொக்கநாதன்பட்டி, கூடக்கோயில் ஆகிய பகுதியில் விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறையினர் விசாரிக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: