சுசீந்திரம், நவ. 20: சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில், அந்தியோதயா திட்டத்தில் தெருக்களை சீரமைக்க ₹8 லட்சத்து 80 ஆயிரம் செலவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவரது வீட்டை ஒட்டிய பகுதியில் அலங்கார கற்கள் பதிக்காமல் பணி நடந்தது. அவரது வீடு சற்று உள்வாங்கிய பகுதியில் இருப்பதால் அலங்கார கற்கள் பதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதேவேளை, ஒரு கால் இழந்த மாற்றுத்திறளாளியான இளங்கோவின் தந்தை சந்தனத்தால் சகதி தேங்கியுள்ள பாதை வழியாக வீட்டிற்கு சென்று வருவதில் சிரமம் உள்ளதால் அந்த பகுதியிலும் அலங்கார கற்கள் பதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.