கரூர், நவ.16: இணைய தளத்தில் பொருட்கள் வாங்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூரில் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இணைந்து பொதுக்குழுக்கூட்டம் நூல் வணிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் வக்கீல் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் வெங்கட்ராமன், அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வம், கந்தசாமி, ஆடிட்டர் நல்லுசாமி, தங்கவேல், லோகநாதன், பால்ராஜ், ராஜாமணி பழனிச்சாமி, அருண் கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்த ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடை செய்து முடிவு எடுத்துள்ளது. அதுவரையில் அரசு அதிகாரிகள் எவ்வித சிரமமும் வணிகர்களுக்கு கொடுக்கக்கூடாது. மத்திய அரசானது 2022ம் ஆண்டு வரை காலநீடிப்பு செய்துள்ளதை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். சொத்து வரியை உயர்த்தி அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பிட்ட சதவீதத்தை அதிகப்படுத்தி நிர்ணயம் செய்து மாற்றி அமைக்க வேண்டும். நகராட்சி கடைகளுக்கு கடையின் அளவைப் பொறுத்து ஒரே மாதிரியான வாடகையை நியாயமான முறையில் அமல்படுத்த வேணடும். ஜிஎஸ்டி வரி ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. வேலை பளு அதிகமாக இருப்பதால் சர்வர் வேலை செய்வதில்லை. இதனால் வர்த்தகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும்.