நாமக்கல், நவ.16: திருச்செங்கோட்டில் இன்று ₹486 கோடியில் புதிய குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்கு ₹399 கோடியில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 669 ஊரக குடியிருப்புகள், ஆலாம்பாளையம் பேரூராட்சி, படவீடு, சங்ககிரி பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ₹87 கோடியில் திருச்செங்கோடு நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்ட அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஆசியாமரியம் வரவேற்று பேசுகிறார்.