சிவகங்கை, நவ.16: சிவகங்கை அருகே ஒக்கூரில் இருந்து அண்ணநகர் வழி இடையமேலூர் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாய் உள்ளது. சிவகங்கை அருகே ஒக்கூர்புதூர் ஊராட்சிக்குட்பட்டது அண்ணாநகர் ஏ, அண்ணாநகர் சி பகுதிகள். ஒக்கூர் சாலையில் இருந்து பிரிந்து அண்ணாநகர் வழியாக இடையமேலூர் செல்லும் இணைப்புச்சாலை உள்ளது. சாலூர், இடையமேலூர், நாலுகோட்டை, கீழப்பூங்குடி, பேரணிப்பட்டி, திருநாராயணபுரம், சாலூர், இந்திராநகர், செம்பரியான்பட்டணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இச்சாலை வழியே தான் காய்கறிகளை வியாபாரிகள் ஏற்றி செல்கின்றனர். கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் இந்த சாலையே பிரதான வழியாகும். சுமார் 2.5 கி.மீ செல்லும் இச்சாலை கடந்த 10 ஆண்டிற்கு முன் போடப்பட்டது. அதன் பிறகு எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை.
