கறம்பக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி. நவ.15:  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் வருவாய் கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணைய வழி சான்று வழங்க ஏதுவாக அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும், இ-அடங்கல் சேவையினை அமலாக்கம் செய்வதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார்.தாலுகா இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கறம்பக்குடி, மழையூர் வருவாய் கிராமங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: