உத்தமபாளையம், நவ.15: கஜாபுயல் பாதிப்பு, திடீர் கலவரங்கள் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய ரிசர்வ்போலீஸ் படையினர் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர். உத்தமபாளையம் பகுதிகளில் கஜா புயல் ஏற்பட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் மக்கள் அச்சப்படாமல் இருக்கும் வகையிலும், புயல், வெள்ளங்களால் மிகவும் பள்ளமான இடங்களில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளால் உண்டாகும் அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாத்திடவும், திடீர் கலவரத்தால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 36 பேர் உத்தமபாளையம் வந்துள்ளனர்.