டூவீலர் விபத்தில் முதியவர் பலி

பழநி, ஜூன் 18: பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் நேற்று முன்தினம் இரவு ஆயக்குடி கொய்யா மார்க்கெட் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்த டூவீலர் செல்வராஜ் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்வராஜ் வழியிலே உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: