நாமத்வாரில் ஏகாதசி பூஜை

பெரியகுளம், ஜூன் 19: பெரியகுளம் தென்கரை தெற்கு பிரகாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி பூஜை நடந்தது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற ஏகாதசி பூஜையில் காலை திருமஞ்சனம், ஸ்வாதி திருநட்சத்திரம், துளசி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்த விஜயம் சொற்பொழிவு நடைபெற்றது. ஏகாதசி பூஜையிலும், கூட்டுப் பிரார்த்தனையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரார்த்தனை மையத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post நாமத்வாரில் ஏகாதசி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: