பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கரூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், நவ. 14: கரூரில் எல்ஐசி முகவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,மன்ற உறுப்பினர்களின் மெடிக்கிளைம் வசதியை முடக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் இதில் பிரச்சனை ஏற்படுகிறது. பணமில்லா அனுமதிக்கு பயனாளிகள் பட்டியலை அனுப்பாமல் தாமதப்படுத்த கூடாது, எல்ஐசி நிர்வாகம் இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லிகாய் சங்க எல்ஐசி முகவர்கள் கரூர் கிளை1 முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அழகர்சாமி, ஜெகதீசன், ரமேஷ், ஜெகதீஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: