குட்கா விற்ற 3 பேர் கைது

மதுரை, நவ. 14: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் பகுதியில் குட்கா விற்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அங்குள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் குட்கா, பொட்டலம், பொட்டலமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (33), அதே பகுதியை சேர்ந்த கலையரசன் (32), முனிச்சாலை ரோட்டை சேர்ந்த ராஜா இமாம் புகாரி (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,630 குட்கா பொட்டலங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: