பணி நிரந்தரம் கோரி மறியல் செய்த மின்வாரிய ஊழியர்கள் 130 பேர் கைது

மதுரை, நவ. 14:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். பணியின்போது ஏற்படும் விபத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நேற்று மதுரையில் மறியலில் ஈடுபட்டனர். கே.புதூரிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் வீரணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட இவர்கள் 130 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: