திருப்பரங்குன்றம், நவ.1: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.8ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.8ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கின்றது. அன் காப்பு கட்டுதலுடன் துவங்கும் விழா நவ.14ம் தேதி வரை நடைபெறும். சஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.13ம் தேதியும் சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கும் நிகழ்ச்சி நவ.12ம் தேதியும் நடைபெறும். வழக்கமாக தீபாவளி திருநாளிற்கு அடுத்தநாள் துவங்கும் கந்தசஷ்டி விழா, இந்த ஆண்டு தீபாவளி முடிந்த இரண்டாம் நாள் துவங்குகின்றது. விழாவிற்கு காப்பு கட்டும் பக்தர்களுக்கு கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும்.