பேரையூர், நவ.1: அரசுப்பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கடியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது காளப்பன்பட்டி. இந்த கிராமத்தில் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி உள்ளது. பள்ளிக்கூடத்தை சுற்றிலும் மழைத்தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் அடிக்கிறது. கொசு உற்பத்தியாகி பகலிலேயே கொசுக்கடியால் பள்ளிக்குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.