ஈரோடு, அக். 31: பள்ளி விளையாட்டு ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட அத்லெடிக் கவுன்சில் இணைந்து ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியினை பிவிபி பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார். பள்ளி விளையாட்டு ஆணையத்தின் செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், தலைவர் குமரவேல் தங்கவேல், ஆலோசகர் பொம்மையன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் நடந்த இந்த விளையாட்டு போட்டிகளில் 20 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம்,