காரைக்கால், அக்.30: காரைக்கால் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி காரைக்கால் அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் முடிவில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேநிலைப்பள்ளி துணை முதல்வர் கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். உடற்கல்வி விரிவுரையாளர் மனோகரன், புதுச்சேரி தடகள சங்கத்தின் செயலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 13 வீரர்கள், வரும் டிசம்பர் மாதம் ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக, மாவட்ட தடகள சங்கத்தின் செயலர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.