தேனி, அக். 30: சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி, கம்பம், போடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், அலுவலங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலை, குடியிருப்புகளுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பெயர் மாற்றுக்கட்டணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் சடையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரசுப்பு,