பொதுமக்கள் மகிழ்ச்சி நத்தத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

நத்தம், அக். 30: டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நத்தத்தில் உள்ள வாரச்சந்தை பகுதியில் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை  கிராமமக்கள், வியாபாரிகள் ஏராளமானோர் அருந்தி சென்றனர். இதில் தமுமுக நிர்வாகிகள் அபுபக்கர் சித்திக், அப்துல் அஹது, சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: