மேலூர், அக். 18:மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் உள்ளது குழிச்செவல்பட்டி. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பரவலாக காய்ச்சல் இருந்தாலும் குறிப்பாக குழிச்செவல்பட்டி கிராமத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த ஊரில் காய்ச்சல் பாதித்தது சுகாதாரத் துறையினருக்கு தெரிய வில்லை. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை வைத்தே சுகாதார துறையினர் எந்தெந்த ஊர்களில் காய்ச்சல் உள்ளது என்பதை கண்டறிவார்கள். இங்கு காய்ச்சல் பரவி உள்ளது மருத்துவ துறையினருக்கு சரிவர தெரியவில்லை.