மதுரை, அக்.18: காலிமனைகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்ற உத்தரவிட்டதுடன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மண்டலம் 2க்குட்பட்ட வார்டு 30 தாசில்தார் நகர், குமரன் தெரு, வார்டு 28 மாட்டுத்தாவணி, டி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் கமிஷனர் அனீஷ்சேகர் ஆய்வு மேற்கொண்டார். குமரன் தெரு பகுதியில் ஒரு வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேவையில்லாத பழைய பொருட்களை உடன் அப்புறப்படுத்துமாறு கூறினார்.