உசிலம்பட்டி, அக். 18: உசிலம்பட்டியில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தினர். ஐந்து கல்ராந்தல் தேவர்சிலை அருகே உசிலம்பட்டி டி.எஸ்.பி, கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் ஜோதிராஜன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.