தக்கலை, அக்.18 : தக்கலை அருகே டூ வீலர் மெக்கானிக்கை கடத்தி சென்று சரமாரி தாக்கி பணம், செல்போன் பறித்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை செக்காலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவரது மகன் சுபின்(23). இவர் அழகியமண்டபம் சந்திப்பில் டூ வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். கடந்த 15ம்தேதி, சுபின் தனது ஒர்க்ஷாப்பில் இருந்த போது, வாலிபர் ஒருவர் தனது நண்பனின் பைக் பழுதாகி நிற்கிறது. வந்து சரி செய்து தரும்படி கூறினார். இதையடுத்து சுபின், அந்த வாலிபருடன் பைக்கில் சென்றார். அங்கிருந்து மாம்பழத்துறையாறு அணைக்கு செல்லும் வழியில் சுபினை அழைத்து சென்றனர். பின்னர் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு இறங்குமாறு அந்த வாலிபர் கூறினார். இதையடுத்து சுபின் இறங்கிய போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த மேலும் சில வாலிபர்கள் வந்தனர்.அவர்கள் அனைவரும் சேர்ந்து சுபினை சரமாரி தாக்கினர்.