புவனகிரி, அக். 17: புதுச்சத்திரம் அருகே உள்ள மடவாப்பள்ளம் கடற்கரையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கடற்கரையோரம் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த அடையாள அட்டையின்படி, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சேடப்பாளையத்தை அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்(57) என்பது தெரிய வந்தது.