வேலூர், அக்.17: வேலூரில் வங்கதேச சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கைதான வங்கதேச வாலிபர், முதலில் தான் கஸ்டமராக இருந்து பின்னர் புரோக்கராக மாறியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். வங்கதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா(30). இவர் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை வேலூருக்கு அழைத்து வந்து, லாட்ஜில் தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் முஸ்கானாவை கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் ரெய்சிகாந்த்நாயக்(29) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். கைதான புரோக்கர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: