திங்கள்சந்தை, அக். 16: மாடத்தட்டுவிளை அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புனித செஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை சேர்மன் அருட்பணி ஜி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி விமலா தூயா மேரி அறிக்கை வாசித்தார். சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.தங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் துறை பயிலும் மாணவ ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கினார். அதற்கான சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். 39 மாணவ ஆசிரியைகளுக்கு பட்டமளிக்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவ ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர்.