சர்வதேச மாணவர் தின விழா

கருங்கல், அக். 16: கருங்கல் - பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 87வது பிறந்த நாள் மற்றும் சர்வதேச மாணவர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் தங்கசுவாமி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர். அப்துல்கலாம் குறித்து மாணவ, மாணவிகள் சிறப்புரையாற்றினர். மேலும், அப்துல்கலாம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் விளக்க உரையுடன் காணொலி காட்சியும் காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.

Related Stories: