சிவகங்கை, அக். 16: சிவகங்கை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலய பராமரிப்பிற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி பெறுவதற்கு கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி வர வேண்டும். ஆலயமும், ஆலயம் கட்டப்பட்ட இடமும் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். ஆலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.