15 பவுன் நகை திருட்டு

திருமங்கலம், அக்.16: கள்ளிக்குடி குபேரன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி(47). கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்து 15 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். வீடு திரும்பிய அழகர்சாமி வீ்ட்டில் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: