காட்டாங்கொளத்தூர் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் முகாம்

கூடுவாஞ்சேரி, அக். 16: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் திமுக சார்பில் வாக்குச்சாவடி மைய முகவர்கள் சீரமைப்பு மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமனம் முகாம் நந்திவரம் குளக்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை தாங்கினார். நிர்வாகி என்.எஸ்.சரவணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக பொறுப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான அன்புச்செல்வன், வக்கீல் குமார் ஆகியோர் கலந்துகொண்டு 1, 2, 4, 5, 8, 9, 10, 11, 12, 14, 15 ஆகிய வார்டுகளில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் திமுக சார்பில் வாக்குச்சாவடி மைய முகவர்கள் சீரமைப்பு மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமனம் முகாமினை தொடங்கி வைத்தனர்.

  இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் கே.பி.ஜார்ஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் சாரங்கபாணி, முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், ரவி, தரணி, பிரகாஷ், நிர்வாகி சந்தோஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: