ராசிபுரம், அக்.12: பாவை கல்லூரியில், அரசு கல்வித்தர மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது. ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில், இந்திய அரசாங்கம் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகவும், கருத்தாளராகவும் புதுடில்லி ஏஐசியின் முன்னாள் இயக்குநரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான பட்னாயக் கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்களின் உண்மையான மதிப்பினை அவர்களுக்கு உணர்த்தி, சிறந்த தலைவராக உருவாக்குவதே தரமான கல்வி ஆகும். நாட்டில் 20 சதவீதம் மாணவ, மாணவிகள் மட்டுமே உயர் கல்வியை தொடர்கின்றனர். உயர்கல்வியின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்துவதற்காகவே, இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கொண்டிருக்கிறது.