நாமக்கல், அக்.12: நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அருளரங்கன்(56), முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்ட கல்வி அலுவலராக அருளரங்கன் பணியாற்றி வருகிறார். பள்ளி கல்வித்துறையில், கடந்த 88ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து, பின்னர் முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2016 ஜூலையில் ஆண்டிபாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.