பரமத்திவேலூர், அக்.12: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கோடாங்கிபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபு (35). தனியார் சிசிடிவி கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். இவரது மனைவி கிருத்திகா. கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். பிரபு தனது குடும்பத்தினருடன் கரூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், எஸ்ஐ கிருத்திகா நேற்று பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடி சென்றுள்ள நிலையில் பிரபு தனது சொந்த ஊரில் வசிக்கும் தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை கரூர் செல்வதாக தாயாரிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியதாக தெரிகிறது. இந்நிலையில் பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ண சுவாமி கோயில் பக்கம் உள்ள முட்புதரில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.