கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம்

நாமக்கல், அக்.12:  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண், தோட்டக்கலை, பொதுப்பணி, பள்ளிக் கல்வி, காவல், கூட்டுறவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,

மாற்றுத் திறனாளிகள் நலன், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் 45 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: