போலீசார் அதிரடி முத்துப்பேட்டை அருகே கடற்கரை விளையாட்டு போட்டி

முத்துப்பேட்டை, அக்.12: முத்துப்பேட்டை அருகே விளாங்காடு ஊராட்சி கரையன்காட்டில் விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கடற்கரை கால்பந்து, கபடி, கைபந்து போட்டிகள் நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு வரவேற்றார்.  வட்டார வளர்ச்சி அலுவலர்  சிவகுமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் கால்பந்து, கபடி, கைப்பந்து போட்டிகளில் விளையாடினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முத்துப்பேட்டை சுங்கத்துறை கண்காணிப்பாளர் தனபால், இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். மாவட்ட ஹாக்கி பயிற்றுனர் ரோஸ் பாத்திமா மேரி நன்றி கூறினார்.

Related Stories: