புதுக்கோட்டை, அக்.12: மாநில அளவிலான செயல்திட்ட கண்காட்சியில் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். திருமயம் அருகே சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செயல்திட்ட கண்காட்சி எக்ஸ்போ -18 அன்மையில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவர் தினேஷ்குமார் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.