மருத்துவமனைக்குள் புகுந்த சாரை நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

மதுரை, செப். 26: மதுரை ரயில்வே மருத்துவமனையில், நேற்று காலை 5 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனை கண்டதும், அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான வீரர்கள், நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால், நோயாளிகள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: