ஓய்வு எஸ்ஐ தற்கொலை

மதுரை, செப். 26: மதுரை ஆத்திக்குளம் ஐலண்ட் காலனியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ. இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், சாகுல் ஹமீதுவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தூங்கச் சென்ற, சாகுல் ஹமீது நேற்று காலை நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு விஷம் குடித்த நிலையில், சாகுல் ஹமீது இறந்து கிடந்தார். தல்லாகுளம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: