தண்டவாள பராமரிப்பு பணி நெல்லை-ெசங்கோட்டை செப்.27ம் தேதி ரத்து

மதுரை, செப். 26: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலிக்கும் செங்கோட்டைக்கும் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், இவ்வழித் தடத்தில் நாளை ரயில் போக்குவரத்து ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி-செங்கோட்டை பிரிவில் உள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், வரும் 27ம் தேதி(வியாழக்கிழமை) திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56801), செங்கோட்டை-திருநெல்வேலி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56800) ஆகிய இரு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அதே நாளில் செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில்(வண்டி எண்: 56796) சேரன்மாதேவிக்கும் திருநெல்வேலிக்குமிடையே ரத்து செய்யப்படுகிறது.இத்தகவலை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வீராச்சுவாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: