விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்குடி, செப் 25: காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி சாலைபாதுகாப்பு குழு சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சத்யா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 1) முருகன் துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கினார். போக்குவரத்து எஸ்ஐ மெஹபுபாஷா, மாவட்ட சாலைபாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ஜெயா நன்றி கூறினார்.

Related Stories: