இன்றைய மின்தடை

மதுரை, செப். 25: மதுரை திருப்பாலையில் உள்ள துணைமின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர் பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூர்யா நகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல் மற்றும் மகாலெட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலூர்: பனையூர் துணைமின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதனையொட்டி பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை கிழக்கு மின்செயற் பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: