குன்னுார், செப்.21: முதன்முறையாக கூட்டுறவு நிறுவனங்களை அறிமுகப்படுத்திய நிக்கல்சனின் 172வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிக்கல்சன் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் அவரது 172வது பிறந்த நாளையொட்டி குன்னுாரில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவர் வாழ்ந்த வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட இணைப்பதிவாளர் பழனிச்சாமி, துணை பதிவாளர் துரைசாமி, ராதாகிருஷ்ணன், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.