பொள்ளாச்சி, செப். 19: பொள்ளாச்சி அருகே உள்ள மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் நாளை 20ம் தேதி மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, அம்பாராம்பாளையம், சுங்கம், சுப்பேகவுண்டன்புதூர், கணபதிபாளையம், திவான்சாபுதூர், ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்பன்கவுண்டன்புதூர், மண்ணூர், வாழைக்கொம்பு நாகூர், மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்சனாரி, வளந்தாயமரம், திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்தூர், சாமியாண்டிபுதூர், நாதேகவுண்டனூர், மண்ணூர், வாழைக்கொம்பு நாகூர், தாவளம், கோபாலபுரம், பெரியபோது, கொளத்துப்புதூர் மற்றும் ஆனைமலையின் ஒரு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4மணிவரை மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.