புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் நாளை சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்பு நடைபெறும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்தி கொடிகம்பத்திற்கு வர்ணம் பூசி தயார் நிலையில் வைத்துள்ளனர். நாடு முழுவதும் நாளை(15ம் தேதி) இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கணேஷ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். இதில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.