தஞ்சை, ஆக. 14: தஞ்சை மாவட்டம் தென்பெரம்பூர் வெண்ணாற்றில் வெட்டாறு, வடவாறு பிரிகிறது. 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சென்று 100 கிலோ மீட்டர் பயணம் செய்து நாகூர் வரை வெட்டாறு செல்கிறது. இதனால் சுமார் 1 லட்சத்து 866 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி ஆறறில் 9,523 கன அடி, வெண்ணாற்றில் 9,526 கனஅடி, கல்லணை கால்வாயில் 3,004 கன அடி, கொள்ளிடத்தில் 25,003 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெடார் வெட்டாற்றில் 15 கதவனை கொண்ட ஷட்டர் உள்ளது. இதனால் கீழ் பகுதியிலுள்ள பல்வேறு வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதற்கும், மேல்புறத்தில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் வகையில் தண்ணீர் திறந்தும் மூடப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீரின் வரத்து அதிகமாக இருப்பதால் மாவட்ட முழுவதும் உஷார் நிலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் ஜெயக்குமார் கூறுகையில்,