தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சீர்காழி, ஆக.14: சீர்காழியில் அரசு அலுவலர் ஒன்றிய இணைப்பு சங்கமான தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக லெட்சுமணன், துணை தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக பாலு, துணை செயலாளராக ஜி.ரவிச்சந்திரன், பொருளாளராக முருகேசன், துணை பொருளாளராக செல்வம், ஆலோசகராக இளங்கோவன்,

கலைவாணன், நமச்சிவாயம், விஜயன், சட்டைய்பபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சாலை பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: