திருவாரூர், ஆக.14: விசி கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை விதைக்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வி.சி கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் பணிக்காக அதற்கான விதைகளை சேகரிக்கும் பணியில் அவர் உட்பட மாநிலம் முழுவதும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.