விளையாட்டுப் போட்டி

சிவகாசி, ஆக. 14:  சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றன. இதில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், தொழில்பிரமுகர் சண்முக நடராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் செல்லத்துரை, தாளாளர் பீனாராஜா சிங், கல்லூரி இயக்குனர் விசித்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் லியோ ராபர்ட் செய்திருந்தார்.

Related Stories: